குஜராத் மாநிலம், அகமதாபாத் விமான நிலையம் அருகே நடந்த ஏர் இந்தியா விமான விபத்தில் 170 பேர் பலியாகியுள்ளனர்.
குஜராத் மாநிலம், அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து ஏர் இந்தியா பயணிகள் விமானம் பகல் 1.17 மணிக்கு லண்டன் நோக்கி புறப்பட்டுச் சென்றுள்ளது. விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட சிறிது தூரத்திலேயே விமானம் கட்டுப்பாட்டை இழந்து, விமான நிலையம் அருகே மேதானி நகர் குடியிருப்பு பகுதியில் கீழே விழுந்து விபத்துக்குள்ளானது.
சரியாக 1.20 மணிக்கு கிட்டத்தட்ட 3 நிமிடங்களுக்குள்ளாக இந்த விபத்து நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது. விமானத்தில் இரண்டு விமானிகள், பத்து விமான ஊழியர்கள் உட்பட 242 பேர் பயணித்து உள்ளனர்.
இந்நிலையில் அகமதாபாத் விமானம் விழுந்ததில் இதுவரை 170 பேர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட உடல்களில் பெரும்பாலானவை கருகிய நிலையில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விமான விபத்தில் மருத்துவ மாணவர்கள் பலர் உயிரிழந்திருக்கலாம் என விமான போக்குவரத்து இயக்குனரகம் கூறியுள்ளது. குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமான விபத்து நடந்த பகுதிக்கு 90 பேர் கொண்ட என்டிஆர்எஃப் குழுவினர் விரைந்துள்ளனர்.