நீட் தேர்வு – சூரிய நாராயணன் தமிழ்நாட்டில் முதலிடம்

Estimated read time 1 min read

தமிழகத்தில் 1,35,715 மாணவர்கள் நீட் தேர்வு எழுதியதில், 76,181 மாணவர்கள் தகுதி மதிப்பெண்களை பெற்றுள்ளனர்.

தமிழகத்தில் 1,35,715 மாணவர்கள் நீட் தேர்வு எழுதியதில், 76,181 மாணவர்கள் தகுதி மதிப்பெண்களை பெற்றுள்ளனர்.

தமிழ்நாட்டில் 26,580 மாணவர்கள் தமிழ் வழி கேள்வித்தாள் மூலமாக நீட் தேர்வு எழுதினர். நாடு முழுவதும் 22,09,318 மாணவர்கள் நீட் தேர்வு எழுதியதில், 12,36,531 மாணவர்கள் தகுதி மதிப்பெண்களை பெற்றுள்ளனர். நீட் தேர்வில் முதல் 100 இடங்களில் 6 தமிழ்நாட்டு மாணவர்கள் இடம் பெற்றுள்ளனர்.

நெல்லையை சேர்ந்த சூரிய நாராயணன் தமிழ்நாட்டில் முதலித்தையும், தேசிய அளவில் 27வது இடத்தையும் பிடித்துள்ளார். தமிழக மாணவர் அபிநித் நாகராஜ் தேசிய அளவில் 50வது இடத்தை பிடித்து நீட் தேர்வில் சாதனை பிடித்துள்ளார்.

புகழேந்தி 61வது இடத்தையும், ஹிருதிக் விஜய ராஜா 63வது இடத்தையும், ராகேஷ் 78வது இடத்தையும், பிரஜன் ஸ்ரீவாரி 88வது இடத்தையும் பெற்றுள்ளனர்.

இதனிடையே நீட் தேர்வில் மதிப்பெண்களை மாற்றியமைக்க பொய் வாக்குறுதி அளித்து மோசடி செய்ததாக இருவரை சிபிஐ கைது செய்தது. மகாராஷ்டிராவைச் சேர்ந்த சந்தீப் ஷா, சலீம் படேல் ஆகிய இருவர் NTA அதிகாரிகளுடன் தொடர்பு இருப்பதாக கூறி மோசடி செய்ததாக புகார் எழுந்தது. மோசடி குறித்து நீட் தேர்வு எழுதிய மாணவர்களின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த சிபிஐ இருவரை கைது செய்தது.

Please follow and like us:

You May Also Like

More From Author