ஜூலை 15 முதல் அனைத்து அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் காலை உணவுத் திட்டம்

Estimated read time 1 min read

முன்னாள் தமிழக முதல்வர் காமராஜரின் பிறந்த நாளான ஜூலை 15-ஆம் தேதி சிறப்பு நாளாகக் கொண்டு, அதே நாளிலிருந்து அனைத்து நகர்ப்புற அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் ‘முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்’ செயல்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

கடந்த 2022ஆம் ஆண்டு செப்டம்பரில் முதன்முறையாக தொடங்கப்பட்ட இந்த திட்டம், தற்போது வரை கிராமப்புற அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது.

இந்த திட்டத்தின் மூலம் மாணவர்களுக்கு சத்தான காலை உணவு வழங்கப்படும் எனவும் மாணவர்களின் கல்வி நேரம் மற்றும் உளவியல் ஒத்துழைப்பை மேம்படுத்தும் நோக்கத்துடன் அமல்படுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த திட்டம் தற்போது நகர்ப்புற பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தப்படுவதால், மாநிலம் முழுவதும் திட்டம் முழுமையாக செயல்பட உள்ள நிலையில் உள்ளது. இதற்காக ரூ.600.25 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.

இந்த திட்டத்தின் கடைசி கட்டமாக நகர்ப்புற அரசு உதவி பெறும் பள்ளிகளில் செயல்படுத்த தேவையான ஆயத்தப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மாணவர்களின் பசியை போக்கி, கல்வியில் ஆர்வத்தை வளர்க்கும் இந்த திட்டம், மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Please follow and like us:

You May Also Like

More From Author