2023-ம் ஆண்டு மே மாதம், மெய்தி மற்றும் குக்கி அகிய 2 இனக்குழுவினருக்கு இடையே மோதல் வெடித்தது. இது வன்முறையாக பரவியதில் இரு தரப்பிலும் 260 பேர் கொல்லப்பட்டனர். வன்முறையை தொடர்ந்து, 60 ஆயிரம் பேர் வேறு இடங்களுக்கு புலம்பெயர்ந்து சென்றனர். ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை இழந்து முகாம்களில் தஞ்சமடைந்தனர்.
இதனை தொடர்ந்து, ராணுவம் உள்ளிட்ட பாதுகாப்பு படையினர் பெருமளவில் குவிக்கப்பட்டு நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. எனினும், அவ்வப்போது வன்முறை பரவி மக்களுக்கு பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. தற்போது அங்கு ஜனாதிபதி ஆட்சி நடைபெற்று வருகின்றது.
இதனிடையே, கலவரத்தால் பாதிக்கப்பட்ட மணிப்பூர் மாநிலத்திற்கு பிரதமர் மோடி ஒருமுறை கூட நேரில் செல்லவில்லை என எதிர்க்கட்சியினர் தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தனர். இந்த சூழலில், பிரதமர் மோடி வருகிற 13-ந்தேதி(நாளை) மிசோரம் மற்றும் மணிப்பூருக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது. கலவரம் ஏற்பட்டு 2 ஆண்டுகளுக்கு பிறகு பிரதமர் மோடி நாளை மணிப்பூருக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார்.
இது குறித்து காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் ஜெய்ராம் ரமேஷ் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவில், ஒரு வழியாக செப்டம்பர் 13-ந்தேதி மணிப்பூர் செல்வதற்கு பிரதமருக்கு தைரியம் வந்து விட்டது போன்று தெரிகிறது என கிண்டலாக தெரிவித்து உள்ளார். ஆனால், இது முன்பே நடந்திருக்க வேண்டும். அதிக காலதாமதம் ஏற்பட்டு உள்ளது என்றும் தெரிவித்து இருக்கிறார்.
இந்நிலையில் பிரதமர் மோடியின் வருகையை முன்னிட்டு மணிப்பூரில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. சுராச்சந்த்பூரில் மோடியை வரவேற்பதற்காக வைக்கப்பட்டிருந்த பேனர்களை சிலர் அகற்ற முயன்றதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் போலீசார் அங்கு சென்று நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழக அரசியல் மற்றும் சினிமா வட்டாரங்களில் மிக முக்கியமான நகர்வாக, தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய்யின் தனிச் செயலாளராக ‘The Route’ நிறுவனத்தின் நிறுவனர் [மேலும்…]
தமிழக மகளிர் மகப்பேறு மற்றும் மகளிர் நோய் மருத்துவர்கள் சங்க மாநிலத்தலைவர் டாக்டர் அமலாதேவி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் கூறுகையில், “மதுரை மாவட்டம் [மேலும்…]
அர்ஜென்டினா கால்பந்து அணியின் கேப்டன் லியோனல் மெஸ்ஸி, ஃபிஃபா உலகக் கோப்பை (FIFA World Cup) வரலாற்றிலேயே அதிக கோல்களை அடித்த மாபெரும் வரலாற்று [மேலும்…]
பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டுள்ள பதிவில், “இன்று சட்டமன்றத்தில் தண்ணீர் கொடுப்பதை பற்றிய ஒரு கோரிக்கையை சகோதரி பிரேமலதா விஜயகாந்த் வைக்கவும் [மேலும்…]
சென்னை மணலி, நெடுஞ்செழியன் தெரு சந்திப்பில், 4.75 கோடி ரூபாய் செலவில், புதிய பேருந்து நிலையம் கட்டும் பணி நடந்து வருகிறது. இதன் கட்டுமான பணிக்காக, [மேலும்…]
உத்தரப் பிரதேசம் லக்னோவின் அலிகஞ்ச் பகுதியில் உள்ள வணிக கட்டிடத்தில் திங்கள்கிழமை மதியம் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி, 12 ஆண்கள் மற்றும் [மேலும்…]
இந்தியாவில் தனியார் துறையின் பங்களிப்புடன் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கும், நாட்டின் பொருளாதார வளர்ச்சியை துரிதப்படுத்துவதற்கும் உலக வங்கியின் நிர்வாக இயக்குநர்கள் குழு $1.5 பில்லியன் [மேலும்…]
உலகப் பெரும் கோடீஸ்வரரும், டெஸ்லா மற்றும் எக்ஸ்ஏஐ நிறுவனங்களின் அதிபருமான எலான் மஸ்க், செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தின் அசாத்திய வளர்ச்சி குறித்து மீண்டும் [மேலும்…]