2023-ம் ஆண்டு மே மாதம், மெய்தி மற்றும் குக்கி அகிய 2 இனக்குழுவினருக்கு இடையே மோதல் வெடித்தது. இது வன்முறையாக பரவியதில் இரு தரப்பிலும் 260 பேர் கொல்லப்பட்டனர். வன்முறையை தொடர்ந்து, 60 ஆயிரம் பேர் வேறு இடங்களுக்கு புலம்பெயர்ந்து சென்றனர். ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை இழந்து முகாம்களில் தஞ்சமடைந்தனர்.
இதனை தொடர்ந்து, ராணுவம் உள்ளிட்ட பாதுகாப்பு படையினர் பெருமளவில் குவிக்கப்பட்டு நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. எனினும், அவ்வப்போது வன்முறை பரவி மக்களுக்கு பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. தற்போது அங்கு ஜனாதிபதி ஆட்சி நடைபெற்று வருகின்றது.
இதனிடையே, கலவரத்தால் பாதிக்கப்பட்ட மணிப்பூர் மாநிலத்திற்கு பிரதமர் மோடி ஒருமுறை கூட நேரில் செல்லவில்லை என எதிர்க்கட்சியினர் தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தனர். இந்த சூழலில், பிரதமர் மோடி வருகிற 13-ந்தேதி(நாளை) மிசோரம் மற்றும் மணிப்பூருக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது. கலவரம் ஏற்பட்டு 2 ஆண்டுகளுக்கு பிறகு பிரதமர் மோடி நாளை மணிப்பூருக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார்.
இது குறித்து காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் ஜெய்ராம் ரமேஷ் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவில், ஒரு வழியாக செப்டம்பர் 13-ந்தேதி மணிப்பூர் செல்வதற்கு பிரதமருக்கு தைரியம் வந்து விட்டது போன்று தெரிகிறது என கிண்டலாக தெரிவித்து உள்ளார். ஆனால், இது முன்பே நடந்திருக்க வேண்டும். அதிக காலதாமதம் ஏற்பட்டு உள்ளது என்றும் தெரிவித்து இருக்கிறார்.
இந்நிலையில் பிரதமர் மோடியின் வருகையை முன்னிட்டு மணிப்பூரில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. சுராச்சந்த்பூரில் மோடியை வரவேற்பதற்காக வைக்கப்பட்டிருந்த பேனர்களை சிலர் அகற்ற முயன்றதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் போலீசார் அங்கு சென்று நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவின் மத்திய வங்கியான ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ), 2026 ஆம் ஆண்டுக்கான மதிப்புமிக்க கோடைகாலப் இன்டர்ன்ஷிப் பயிற்சித் திட்டத்திற்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது. ரிசர்வ் வங்கியின் [மேலும்…]
டெல்லி தேசியத் தலைநகர் பிராந்தியத்தின் காற்றுத் தரம் மிக மோசமான நிலையை அடைந்ததைத் தொடர்ந்து, ‘படிப்படியான பதில் நடவடிக்கை திட்டம்’ (GRAP) உச்சபட்ச நடவடிக்கையான [மேலும்…]
கொப்பரைத் தேங்காய்க்கான ஆதார விலையை உயர்த்திய பிரதமர் மோடிக்கு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் நன்றி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள [மேலும்…]
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- திமுக அரசு பொறுப்பேற்று கடந்த 55 மாதங்களாக, மதுரை மாநகரில் அம்மா அரசின் பொற்கால [மேலும்…]
அடுத்தாண்டு தொடக்கத்தில் பொதுத்தேர்தல் நடத்துவதற்கு ஏதுவாக, தாய்லாந்தின் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளது. தென்கிழக்கு ஆசிய நாடான தாய்லாந்தில், 2023ல் நாடாளுமன்ற தேர்தல் நடந்து கூட்டணி ஆட்சி [மேலும்…]
கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸியின் இந்தியச் சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக, கொல்கத்தாவில் உள்ள விவேகானந்தா யுவபாரதி சால்ட் லேக் மைதானத்தில் சனிக்கிழமை (டிசம்பர் 13) [மேலும்…]
உலகப் பொருளாதாரத்தின் நிதானமற்றதன்மை அதிகரித்த நிலைமையில், சீனா, மேலும் ஆக்கபூர்வமான நிலையான கொள்கைகளை வகுத்துள்ளது. இது சொந்த நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்குத் துணை புரிவதோடு, [மேலும்…]
ஜப்பானின் 731ஆவது ராணுவப் படையை சுவெட் யூனியன் விசாரணை செய்தது குறித்து ரஷியா சீனாவுக்கு ஒப்படைத்த பதிவேடுகளை சீன மத்திய ஆவணக்காப்பகம் டிசம்பர் 13ஆம் [மேலும்…]