2023-ம் ஆண்டு மே மாதம், மெய்தி மற்றும் குக்கி அகிய 2 இனக்குழுவினருக்கு இடையே மோதல் வெடித்தது. இது வன்முறையாக பரவியதில் இரு தரப்பிலும் 260 பேர் கொல்லப்பட்டனர். வன்முறையை தொடர்ந்து, 60 ஆயிரம் பேர் வேறு இடங்களுக்கு புலம்பெயர்ந்து சென்றனர். ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை இழந்து முகாம்களில் தஞ்சமடைந்தனர்.
இதனை தொடர்ந்து, ராணுவம் உள்ளிட்ட பாதுகாப்பு படையினர் பெருமளவில் குவிக்கப்பட்டு நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. எனினும், அவ்வப்போது வன்முறை பரவி மக்களுக்கு பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. தற்போது அங்கு ஜனாதிபதி ஆட்சி நடைபெற்று வருகின்றது.
இதனிடையே, கலவரத்தால் பாதிக்கப்பட்ட மணிப்பூர் மாநிலத்திற்கு பிரதமர் மோடி ஒருமுறை கூட நேரில் செல்லவில்லை என எதிர்க்கட்சியினர் தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தனர். இந்த சூழலில், பிரதமர் மோடி வருகிற 13-ந்தேதி(நாளை) மிசோரம் மற்றும் மணிப்பூருக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது. கலவரம் ஏற்பட்டு 2 ஆண்டுகளுக்கு பிறகு பிரதமர் மோடி நாளை மணிப்பூருக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார்.
இது குறித்து காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் ஜெய்ராம் ரமேஷ் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவில், ஒரு வழியாக செப்டம்பர் 13-ந்தேதி மணிப்பூர் செல்வதற்கு பிரதமருக்கு தைரியம் வந்து விட்டது போன்று தெரிகிறது என கிண்டலாக தெரிவித்து உள்ளார். ஆனால், இது முன்பே நடந்திருக்க வேண்டும். அதிக காலதாமதம் ஏற்பட்டு உள்ளது என்றும் தெரிவித்து இருக்கிறார்.
இந்நிலையில் பிரதமர் மோடியின் வருகையை முன்னிட்டு மணிப்பூரில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. சுராச்சந்த்பூரில் மோடியை வரவேற்பதற்காக வைக்கப்பட்டிருந்த பேனர்களை சிலர் அகற்ற முயன்றதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் போலீசார் அங்கு சென்று நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
உலக பொருளாதாரத்தில் பெரும் செல்வந்தர்களின் ஆதிக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த ஆண்டு மார்ச் 1-ஆம் தேதி நிலவரப்படி எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில், உலகம் முழுவதும் [மேலும்…]
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முன்னேற்பாடுகளைத் தீவிரமாக ஆய்வு செய்து வரும் இந்தியத் தேர்தல் ஆணையம், தமிழகத்தில் இன்று 4 மாவட்டக் காவல் கண்காணிப்பாளர்களை [மேலும்…]
தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, அசாம் மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய ஐந்து மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் தேதிகளைத் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் அறிவித்துள்ளார். [மேலும்…]
இந்தியாவில் நாள்தோறும் சுமார் 2.3 கோடி மக்கள் இரயில்களில் பயணம் செய்யும் நிலையில், 1986-ம் ஆண்டு முதல் பயன்பாட்டில் இருக்கும் பழைய முன்பதிவு முறைக்கு [மேலும்…]
கிரெடிட் கார்டு எனப்படும் கடன் அட்டைப் பயன்பாட்டில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யும் வகையில் இந்திய ரிசர்வ் வங்கி புதிய விதிமுறைகளை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் [மேலும்…]
இந்திய விமானப்படையின் (IAF) பலத்தை அதிகரிக்கும் வகையில், நவீன தொழில்நுட்பங்கள் கொண்ட ‘சுக்கோய்-57’ (Su-57M1E) ரக ஐந்தாம் தலைமுறை போர் விமானங்களை இந்தியாவுக்கு வழங்க [மேலும்…]
மத்திய கிழக்கு விவகாரங்களுக்கான சீனாவின் சிறப்புத் தூதர் ஜாய் ஜுன், 15ஆம் நாள் குவைத் நகரில் குவைத் வெளியுறவு அமைச்சர் ஜாராஹ் சந்தித்தார். ஜாய் [மேலும்…]
ஜப்பானிய பொறியியல் நிறுவனமான ஷிமிசு கார்ப்பரேஷன், சந்திரனை சுற்றி ஒரு பெரிய சூரிய சக்தி வளையத்தை அமைக்க முன்மொழிந்துள்ளது. “லூனா ரிங்” என்று அழைக்கப்படும் [மேலும்…]