2023-ம் ஆண்டு மே மாதம், மெய்தி மற்றும் குக்கி அகிய 2 இனக்குழுவினருக்கு இடையே மோதல் வெடித்தது. இது வன்முறையாக பரவியதில் இரு தரப்பிலும் 260 பேர் கொல்லப்பட்டனர். வன்முறையை தொடர்ந்து, 60 ஆயிரம் பேர் வேறு இடங்களுக்கு புலம்பெயர்ந்து சென்றனர். ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை இழந்து முகாம்களில் தஞ்சமடைந்தனர்.
இதனை தொடர்ந்து, ராணுவம் உள்ளிட்ட பாதுகாப்பு படையினர் பெருமளவில் குவிக்கப்பட்டு நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. எனினும், அவ்வப்போது வன்முறை பரவி மக்களுக்கு பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. தற்போது அங்கு ஜனாதிபதி ஆட்சி நடைபெற்று வருகின்றது.
இதனிடையே, கலவரத்தால் பாதிக்கப்பட்ட மணிப்பூர் மாநிலத்திற்கு பிரதமர் மோடி ஒருமுறை கூட நேரில் செல்லவில்லை என எதிர்க்கட்சியினர் தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தனர். இந்த சூழலில், பிரதமர் மோடி வருகிற 13-ந்தேதி(நாளை) மிசோரம் மற்றும் மணிப்பூருக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது. கலவரம் ஏற்பட்டு 2 ஆண்டுகளுக்கு பிறகு பிரதமர் மோடி நாளை மணிப்பூருக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார்.
இது குறித்து காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் ஜெய்ராம் ரமேஷ் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவில், ஒரு வழியாக செப்டம்பர் 13-ந்தேதி மணிப்பூர் செல்வதற்கு பிரதமருக்கு தைரியம் வந்து விட்டது போன்று தெரிகிறது என கிண்டலாக தெரிவித்து உள்ளார். ஆனால், இது முன்பே நடந்திருக்க வேண்டும். அதிக காலதாமதம் ஏற்பட்டு உள்ளது என்றும் தெரிவித்து இருக்கிறார்.
இந்நிலையில் பிரதமர் மோடியின் வருகையை முன்னிட்டு மணிப்பூரில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. சுராச்சந்த்பூரில் மோடியை வரவேற்பதற்காக வைக்கப்பட்டிருந்த பேனர்களை சிலர் அகற்ற முயன்றதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் போலீசார் அங்கு சென்று நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்திய டி20 கிரிக்கெட் அணியானது தற்போது ஆஸ்திரேலியாவில் நடைபெற இருக்கும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாட [மேலும்…]
தமிழ் சினிமாவின் அசைக்க முடியாத ஆளுமை சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த். 74 வயதான ரஜினிகாந்த் சினிமாவில் இருந்து ஓய்வு பெற முடிவெடுத்து உள்ளதாக வலைப்பேச்சு செய்தி [மேலும்…]
சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழுவின் உறுப்பினரும், வெளியுறவு அமைச்சருமான வாங்யீ, ஜப்பானின் புதிய வெளியுறவு அமைச்சர் மோடேகி தோஷிமிட்சு உடன் [மேலும்…]
8வது ஊதியக் குழுவுக்கு உறுப்பினர்களை நியமிக்க ஒன்றிய அமைச்சரவை ஒப்பதல் வழங்கியுள்ளது. 8வது ஊதியக் குழுவுக்கு உறுப்பினர்களை நியமிக்க ஒன்றிய அமைச்சரவை ஒப்பதல் வழங்கியுள்ளது. [மேலும்…]
மோந்தா புயல் ஆந்திராவில் இன்றிரவு கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆந்திர மாநிலம் காக்கிநாடாவிற்கு தெற்கு தென்கிழக்கே 100 கிலோமீட்டர் [மேலும்…]
கோவை மாநகராட்சி அலுவலகம் முன்பு உள்ள காந்தி சிலைக்கு துணை குடியரசு தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். துணை குடியரசு தலைவர் [மேலும்…]
ஐந்தாண்டு திட்டத்தை அறிவியல் முறையில் வகுத்து, தொடர்ச்சியாக செயல்படுத்துவது, சீன ஆட்சிமுறையின் முக்கிய அனுபவமாகும். சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 20ஆவது மத்திய கமிட்டியின் 4ஆவது [மேலும்…]
சீனத் தலைமையமைச்சர் லீச்சியாங், அக்டோபர் 28ஆம் நாள், மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூரில் நடைபெற்ற 28ஆவது சீன-ஆசியான் தலைவர்களின் உச்சிமாநாட்டில் கலந்துகொண்டார். அப்போது அவர் கூறுகையில், [மேலும்…]