ஆர்எஸ்எஸ் அமைப்பின் மூத்த தலைவர் காலமானார்

Estimated read time 0 min read

ஆர்எஸ்எஸ் அமைப்பின் மூத்த நிர்வாகி மதுபாய் குல்கர்னி நேற்று காலமானார். இவருக்கு 88 வயது ஆகிறது. கடந்த 1942 ஆம் ஆண்டு இவர் ஆர்எஸ்எஸ் அமைப்பில் இணைந்த நிலையில் மாவட்ட மற்றும் மாநில பதவிகளில் பொறுப்பு வகித்துள்ளார். கடந்த 1985 ஆம் ஆண்டு இவர் மாநில நிர்வாகியாக அவர் இருந்தபோது மாவட்ட நிர்வாகியாக ஆர்எஸ்எஸ் அமைப்பில் பணிபுரிந்து வந்த தற்போதைய பிரதமர் மோடியை பாஜகவில் இணையும்படி அறிவுறுத்தினார்.

கடந்த 2015 ஆம் ஆண்டு வரை இவர் ஆர்எஸ்எஸ் அமைப்பில் பணியாற்றிய நிலையில் அதன்பிறகு உடல்நல குறைவினால் பொது வாழ்க்கையில் இருந்து விலகினார். மேலும் பிரதமர் மோடியை அரசியலுக்கு அனுப்புவதில் முக்கிய பங்கு வகித்த மதுபாய் குல்கர்னி மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில் இன்று மாலை இறுதி சடங்கு நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கதாகும்

Please follow and like us:

You May Also Like

More From Author