பாகிஸ்தான் மற்றும் சவுதி அரேபியா இடையே புதிய பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
இந்த ஒப்பந்தத்தின்படி, இரு நாடுகளும் போரில் ஈடுபட்டால், ஒருவரை ஒருவர் பாதுகாத்துக் கொள்ள உதவ வேண்டும் என உறுதி அளிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்சர் கவாஜா ஆசிப், இந்தியாவுடனான போர் சூழலில் சவுதி அரேபியா பாகிஸ்தானுக்கு ஆதரவு அளிக்கும் என்று உறுதிப்படுத்தியுள்ளார்.
இது நேட்டோ ஒப்பந்தத்தின் 5வது பிரிவுக்கு ஒத்ததாக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, பாகிஸ்தானின் அணு ஆயுதங்கள் சவுதி அரேபியாவின் பயன்பாட்டுக்குக் கிடைக்கும் என்றும் ஆசிப் தெரிவித்துள்ளார்.
இந்த ஒப்பந்தம் தாக்குதலுக்கானது அல்ல, மாறாக தற்காப்புக்கானது என பாகிஸ்தான் கூறியுள்ள போதிலும், பிராந்தியத்தில் பதற்றத்தை இது அதிகரித்துள்ளது.
இந்தியாவுடன் போர் ஏற்பட்டால் சவுதி அரேபியா பாதுகாப்பிற்கு வருமாம்; சொல்கிறார் பாகிஸ்தான் அமைச்சர்
