திருச்செந்தூர் முருகன் கோயிலில் அறங்காவலர் குழு உறுப்பினர்களை நியமிக்க உயர்நீதிமன்ற உத்தரவு!

Estimated read time 0 min read

திருச்செந்தூர் முருகன் கோயிலில் விதிகள்படி அறங்காவலர் குழு உறுப்பினர்களை நியமிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை அமர்வு உத்தரவிட்டுள்ளது.

இந்து சமய அறநிலையத்துறை விதிப்படி அதன் கட்டுப்பாட்டில் வரும் கோயில்களில் ஒரு பெண் மற்றும் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் என 5 உறுப்பினர்களைக் கொண்ட அறங்காவலர் குழு அமைக்கப்பட வேண்டும் எனவும், அதன்படி திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோயிலில் அறங்காவலர் குழுவை அமைக்க உத்தரவிட வேண்டும் என்றும் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த நபர் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இது குறித்த விசாரணையில், அறங்காவலர் குழு தலைவரை நியமித்து ஓராண்டாகியும் உறுப்பினர்களை நியமிக்காதது ஏன் எனக் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், 4 மாதங்களுக்குள் அறங்காவலர் குழு அமைக்காவிட்டால் நீதிமன்றமே உறுப்பினர்களை நியமிக்கும் என எச்சரிக்கை விடுத்து, வழக்கை முடித்து வைத்தனர்.

Please follow and like us:

You May Also Like

More From Author