டிரம்ப் கருத்தால் புதிய சர்ச்சை; பிரதமர் மோடி மீது ராகுல் காந்தி காட்டம்  

Estimated read time 0 min read

ரஷ்யாவிடம் இருந்து இந்தியா எண்ணெய் வாங்குவதை நிறுத்திக்கொள்ளும் என பிரதமர் நரேந்திர மோடி தன்னிடம் உறுதியளித்ததாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியதை அடுத்து, வியாழக்கிழமை (அக்டோபர் 16) அன்று அரசியல் ரீதியிலான சர்ச்சை வெடித்தது.
வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசும்போது டிரம்ப் இந்தக் கருத்தை தெரிவித்தார்.
இது காங்கிரஸ் தலைவர் மற்றும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளானது.
ராகுல் காந்தி சமூக ஊடகங்களில் வெளியிட்ட பதிவில், பிரதமர் மோடி டிரம்புக்கு பயப்படுகிறார் என்றும், அமெரிக்க முன்னாள் அதிபரின் கூற்றுகளுக்கு மறுப்பு தெரிவிக்கத் தவறிவிட்டார் என்றும் குற்றம் சாட்டினார்.

Please follow and like us:

You May Also Like

More From Author