இந்த ஆண்டில் மட்டும் பொதுமக்களிடம் இருந்து 21 லட்சம் புகார்கள்  

Estimated read time 1 min read

மத்தியப் பணியாளர், பொதுமக்கள் குறைகள் மற்றும் ஓய்வூதியத் துறை அமைச்சகம் மாநிலங்களவையில் தாக்கல் செய்தத் தகவலின்படி, இந்த ஆண்டு இதுவரை 21 லட்சத்திற்கும் அதிகமான பொதுமக்களின் புகார்கள் பெறப்பட்டுள்ளன.
இது அரசு நிர்வாகத்தின் மீது மக்களுக்கு அதிகரித்துள்ள நம்பிக்கையைக் காட்டுவதாக மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.
கடந்த 2014-ஆம் ஆண்டில் சுமார் 2 லட்சம் புகார்கள் மட்டுமே பெறப்பட்ட நிலையில், தற்போது அது 21 லட்சமாகப் பத்து மடங்கு அதிகரித்துள்ளது.
அரசுத் துறைகளில் உள்ளக் குறைபாடுகளைப் பொதுமக்கள் எளிதாகத் தெரிவிக்க ‘சிபிஜிஆர்ஏஎம்எஸ்’ (CPGRAMS) என்ற டிஜிட்டல் தளம் மேம்படுத்தப்பட்டதே இதற்கு முக்கியக் காரணம். மக்கள் இப்போதுத் தங்கள் வீட்டில் இருந்தபடியே இணையதளம் அல்லது ஆப் மூலம் புகார்களைப் பதிவு செய்ய முடிகிறது.

You May Also Like

More From Author