இந்தியா-நியூசிலாந்து இடையே வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது

Estimated read time 1 min read

இந்தியாவும் நியூசிலாந்தும் தங்களுக்கு இடையிலான தடையில்லா வர்த்தக ஒப்பந்த (FTA) பேச்சுவார்த்தைகளை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளன.
இதன் மூலம் இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம் மற்றும் முதலீடுகள் பெருமளவு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஒப்பந்தத்தின்படி, நியூசிலாந்திலிருந்து இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் 95% பொருட்களுக்கான சுங்க வரி கணிசமாகக் குறைக்கப்பட்டுள்ளது அல்லது முழுமையாக நீக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் அடுத்த 20 ஆண்டுகளில் நியூசிலாந்தின் ஏற்றுமதி ஆண்டுக்கு 1.1 பில்லியன் டாலரிலிருந்து 1.3 பில்லியன் டாலராக உயரும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும், நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்ஸனும் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தம் குறித்து தொலைபேசியில் உரையாடித் தங்களது மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.

You May Also Like

More From Author