தமிழக அரசியலில் அடுத்த அதிரடி.. விஜய்யுடன் கூட்டணியா? உண்மையை உடைத்த கிரிஷ் சோடங்கர்..!! 

Estimated read time 0 min read

சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் தலைமையில் சட்டமன்றத் தேர்தல் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், கரூர் எம்.பி. ஜோதிமணி அளித்த புகாரின் பேரில் திண்டுக்கல் மாவட்டச் செயலாளர் சதீஷ்குமார் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கத் தலைமைக்குப் பரிந்துரை செய்துள்ளதாகக் குறிப்பிட்டார்.

மேலும், பிரவீன் சக்கரவர்த்தி நடிகர் விஜயைச் சந்தித்தது குறித்த கேள்விக்கு, தமிழ்நாட்டில் யாரோ யாரையோ சந்திப்பதையெல்லாம் தாங்கள் பொருட்படுத்த வேண்டிய அவசியம் இல்லை என்று சுருக்கமாகப் பதிலளித்தார்.

கூட்டணி குறித்துப் பேசிய கிரிஷ் சோடங்கர், தமிழக வெற்றிக் கழகத்துடன் காங்கிரஸ் கட்சி எந்தவித பேச்சுவார்த்தையிலும் ஈடுபடவில்லை என்பதைத் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

வரும் தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் கட்சி பலமாக இருக்கும் 125 தொகுதிகள் அடங்கிய பட்டியலைத் தயார் செய்து வைத்திருப்பதாக அவர் முக்கியமான தகவலைப் பகிர்ந்துகொண்டார்.

Please follow and like us:

You May Also Like

More From Author