ரயில் இன்ஜின் வெடித்து தீ விபத்து…. 600 வாகனங்கள் எரிந்த நாசம்…. திருச்சூரில் பரபரப்பு….!! 

Estimated read time 0 min read

கேரள மாநிலம் திருச்சூர் ரயில் நிலையத்தில் ஏற்பட்ட பயங்கரத் தீ விபத்து பெரும் பதற்றத்தை உருவாக்கியுள்ளது. சோதனை ஓட்டத்திற்காகத் தயார் நிலையில் இருந்த ரயில் என்ஜின் ஒன்றில் திடீரென தீப்பிடித்தது. கண்ணிமைக்கும் நேரத்தில் தீ மளமளவெனப் பரவியதில், ரயில் நிலைய வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த சுமார் 600 இருசக்கர வாகனங்கள் முற்றிலும் எரிந்து சாம்பலாகின.

தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் நீண்ட நேரம் போராடித் தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதனால் பெரும் உயிர்ச் சேதம் தவிர்க்கப்பட்டது. இருப்பினும், கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான வாகனங்கள் சேதமடைந்தது மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்து எதனால் ஏற்பட்டது என்பது குறித்து ரயில்வே போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Please follow and like us:

You May Also Like

More From Author