குடியுரிமை (திருத்த) சட்டம் அமல்படுத்தப்பட்டது என தமிழ்நாடு அரசு அறிவித்த நிலையில், அந்தச் சட்டம் திரும்பப் பெறப்படாது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா திட்டவட்டமாக கூறியுள்ளார்.
சிஏஏவை மாநிலங்கள் தடுக்க முடியாது என்றும் அமித் ஷா கூறியுள்ளார்.
“CAA ஒருபோதும் திரும்பப் பெறப்படாது. நமது நாட்டில் இந்திய குடியுரிமையை உறுதிசெய்வது எங்களின் இறையாண்மையான முடிவு, அதில் நாங்கள் ஒருபோதும் சமரசம் செய்து கொள்ள மாட்டோம்” என்று அமித் ஷா செய்தி நிறுவனமான ANI க்கு அளித்த பேட்டியில் கூறினார்.
மேலும் இந்தச் சட்டத்தை அமல்படுத்துவது குறித்து பேசிய அமித் ஷா, “சிறுபான்மையினர் அல்லது வேறு யாரும் பயப்படத் தேவையில்லை. காரணம் சிஏஏவில் யாருடைய குடியுரிமையையும் பறிக்கும் அதிகாரம் இல்லை” என்றார்.