சர்வதேச ஒழுங்கைப் பெருமளவில் சீர்குலைக்கும் நாடு அமெரிக்கா என்று இவ்வாண்டின் மியுனிச் பாதுகாப்பு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சீன ஊடக குழுமத்தின் சி.ஜி.டி.என் நிறுவனம் உலக இணையப் பயனர்களிடம் நடத்திய கருத்து கணிப்பு ஒன்றில் பாதுகாப்பு, பொருளாதாரம், வர்த்தகம், பொது மதிப்பு ஆகியவற்றுக்கான கருத்துகளில் அமெரிக்காவுக்கும் ஐரோப்பாவுக்கும் இடையே விரிசல் ஏற்பட்டுள்ளதாக 81.4விழுக்காட்டினர் கருத்து தெரிவித்தனர்.
மேலும், அமெரிக்காவின் செயல்கள் ஐரோப்பாவின் உரிமைகளைக் கடுமையாகப் பாதித்துள்ளது என்று 88.4விழுக்காட்டினர் கூறினர்.
ஐரோப்பாவின் நெடுநோக்கு குறைபாடு மற்றும் உள்புற ஒற்றுமை குறைபாடினால், அமெரிக்காவின் ஒருதலைப்பட்ச கொடுமையை ஐரோப்பாவால் சமாளிக்க முடியாது என்றும் 86.6விழுக்காட்டினர் கருத்து தெரிவித்தனர்.
