இன்று (பிப்ரவரி 19) இந்தியப் பங்குச் சந்தையில் கரடியின் பிடி வலுவாக இருந்தது.
வர்த்தக நேர முடிவில், மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 1,236 புள்ளிகள் சரிந்து 82,498 ஆகவும், தேசிய பங்குச்சந்தை குறியீடான நிஃப்டி 365 புள்ளிகள் சரிந்து 25,454 ஆகவும் நிலைபெற்றன.
ரிலையன்ஸ், ஹெச்டிஎஃப்சி வங்கி போன்ற முன்னணி நிறுவனங்களின் பங்குகள் சரிவைச் சந்தித்ததால், முதலீட்டாளர்களுக்குச் சுமார் 6 லட்சம் கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்தியப் பங்குச்சந்தை வீழ்ச்சி: 1,200 புள்ளிகளுக்கு மேல் சரிந்த சென்செக்ஸ்
