பாகிஸ்தானைச் சேர்ந்த லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பு, டெல்லியின் வரலாற்றுச் சிறப்புமிக்க செங்கோட்டை மற்றும் சாந்தினி சௌக் பகுதியில் உள்ள கோவில்களைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
பிப்ரவரி 21, 2026 (சனிக்கிழமை) அன்று இந்தத் தகவல் வெளியானதைத் தொடர்ந்து, டெல்லி முழுவதும் பாதுகாப்புப் படையினர் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.
உளவுத்துறை தகவல்களின்படி, பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள ஒரு மசூதியில் கடந்த பிப்ரவரி 6 ஆம் தேதி நடந்த குண்டுவெடிப்புகளை காரணம்காட்டி பழிவாங்கும் நோக்கில், இந்தியாவில் பெரிய அளவிலான ஐஇடி குண்டுவெடிப்புகளை நடத்த லஷ்கர்-இ-தொய்பா சதி செய்கிறது.
டெல்லி மட்டுமின்றி, இந்தியாவின் பிற முக்கிய நகரங்களில் உள்ள புகழ்பெற்ற கோவில்களும் இந்த பயங்கரவாத அமைப்பின் இலக்கில் இருப்பதாகத் தெரியவந்துள்ளது.
செங்கோட்டை மற்றும் கோவில்களைத் தகர்க்க லஷ்கர்-இ-தொய்பா சதி
