அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் கௌதமி, ஓ.பன்னீர்செல்வம் திமுகவில் இணைந்தது குறித்து தனது கடும் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.
“மறைந்த முதல்வர் அம்மாவால் இரண்டு முறை முதலமைச்சர் நாற்காலியில் அமர வைக்கப்பட்ட ஒரு நபர், இன்று அதே அம்மா யாரைத் ‘தீய சக்தி’ என்று விரட்டினாரோ, அந்த திமுகவிலேயே போய் இணைந்திருப்பது துரோகத்தின் உச்சகட்டம்” என்று அவர் சாடியுள்ளார்.
இத்தனை தசாப்தங்களாக அதிமுக-வில் இருந்துவிட்டு, இன்று சுயநலத்திற்காகத் தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்ட ஓபிஎஸ்-இன் செயல் ஒரு ‘அவகாசவாதம்’ (Opportunism) என்றும், இது தொண்டர்களை ஏமாற்றும் செயல் என்றும் கௌதமி விமர்சித்துள்ளார்.
