ஈரானின் உச்சத்தலைவர் அயத்துல்லா அலி கமேனி கொல்லப்பட்டதற்கு சீனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
ஈரானின் உச்சத்தலைவர் கமேனியின் கொலை, ஈரானின் இறையாண்மை மீது தொடுக்கப்பட்ட கடும் வன்முறை என சீனா தெரிவித்துள்ளது
கமேனி கொலையால் ஐக்கிய நாடுகள் சபையின் கொள்கைகள் நசுக்கப்பட்டுள்ளன என கூறியுள்ள சீனா,அமெரிக்கா, இஸ்ரேல் நாடுகள் உடனடியாக ஈரான் மீதான தாக்குதலை நிறுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளது.
