அரசியலில் முற்றுப்புள்ளி என்பதே கிடையாது – பிரதமர் மோடி

Estimated read time 0 min read

அரசியலில் முற்றுப்புள்ளி என்பதே கிடையாது என, பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற மாநிலங்களவை துணைத்தலைவராக உள்ள மூத்த உறுப்பினர் ஹரிவன்ஸ் பதவிக்காலம் நிறைவடைவதை தொடர்ந்து பிரியாவிடை வழங்கும் நிகழ்ச்சி மாநிலங்களவையில் நடைபெற்றது. இதில் பங்கேற்று உரையாற்றிய பிரதமர் மோடி, மாநிலங்களவை என்பது விலைமதிப்பற்ற அனுபவமும் ஞானமும் நிறைந்த ஓர் இடம் என்று தெரிவித்தார்.

அரசியலுக்கு எப்போதும் முற்றுப்புள்ளி என்பதே கிடையாது – பதவிகளில் இருந்து விலகினாலும் பொது சேவைக்கான பணிகள் தொடர வேண்டும் என அனைத்து உறுப்பினர்களையும் பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார்.

மேலும் மூத்த தலைவர்களிடமிருந்து இளம் தலைவர்கள் அதிகம் கற்றுக் கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். குறிப்பாக மல்லிகார்ஜுன கார்கே, சரத்பவார் உள்ளிட்ட தலைவர்களிடமிருந்து உத்வேகம் மற்றும் வழிகாட்டுதல்களை இளம் உறுப்பினர்கள் பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும் பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார்.

Please follow and like us:

You May Also Like

More From Author