அர்ஜென்டினாவில் ராணுவ புரட்சியின் 50-வது ஆண்டு நினைவு!

Estimated read time 1 min read

அர்ஜென்டினாவில் ராணுவப் புரட்சியின் 50-வது ஆண்டை முன்னிட்டு, தலைநகர் பியூனஸ் அயர்ஸில் மாபெரும் அமைதிப் பேரணி நடைபெற்றது.

அர்ஜென்டினாவில் கடந்த 1976-ம் ஆண்டு நடைபெற்ற ராணுவப் புரட்சியின்போது கடத்தப்பட்டும், கொல்லப்பட்டும் காணாமல் போனதாக கருதப்படும் சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரின் நினைவாக இந்தப் பேரணி நடைபெற்றது.

தலைநகர் பியூனஸ் அயர்ஸில் ஒவ்வொரு ஆண்டும் அனுசரிக்கப்படும் இந்த ‘உண்மை மற்றும் நீதி தினம்’ ஜனநாயகத்தின் மதிப்பையும், மனித உரிமை மீறல்களுக்கு எதிரான மக்களின் உறுதியையும் மீண்டும் ஒருமுறை உலகிற்கு உணர்த்தியுள்ளது.

பேரணியின் போது பங்கேற்ற ஆயிரக்கணக்கான பொதுமக்கள் காணாமல் போனதாக கூறப்படுபவர்களின் புகைப்படங்கள், பதாகைகள் ஆகியவற்றை கைகளில் ஏந்தியவாறு வரலாற்றுச் சிறப்புமிக்க பிளாசா டி மாயோ சதுக்கத்தை நோக்கி ஊர்வலமாகச் சென்றனர்.

50 ஆண்டுகள் கடந்த பின்னரும், அந்த ஆட்சியின் வடுக்கள் இன்னும் மறையவில்லை என்பதையும், அர்ஜென்டினா மக்கள் இன்னும் நீதிக்காகக் காத்திருப்பதையும் இந்த மாபெரும் ஆர்ப்பாட்டம் பறைசாற்றியது

Please follow and like us:

You May Also Like

More From Author