பிரதமர் நரேந்திர மோடி தனது மாதந்திர வானொலி நிகழ்ச்சியான மன் கி பாத் உரையின் 132வது பகுதியில் இன்று (மார்ச் 29) நாட்டு மக்களுடன் உரையாடினார்.
இதில் மத்திய கிழக்கு நாடுகளில் கடந்த ஒரு மாதமாக நீடித்து வரும் கடுமையான போர் சூழல் குறித்து அவர் மிகுந்த கவலை வெளியிட்டார்.
உலகளாவிய ரீதியில் மார்ச் மாதம் மிகவும் கொந்தளிப்பான ஒன்றாக அமைந்துவிட்டது என்றும், இந்த இக்கட்டான நேரத்தில் 140 கோடி இந்தியர்களும் ஒற்றுமையாக இருக்க வேண்டியது அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார்.
வளைகுடா போர்: 140 கோடி மக்களுக்கும் பிரதமர் மோடி விடுத்த முக்கிய கோரிக்கை!
