காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் சுவாமி கோயிலில் பங்குனி பிரம்மோற்சவத்தையொட்டி, வெள்ளி குதிரை வாகனத்தில் சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
ஏகாம்பரநாதர் சுவாமி கோயிலில் கடந்த 23ஆம் தேதி பங்குனி பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
நாள்தோறும் சுவாமியும், அம்பாளும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி அருள் பாலித்தனர்.
விழாவின் 8ஆம் நாள் நிகழ்ச்சியில் ஏகாம்பரநாதர் சுவாமியும், ஏலவார்குழலியும் சிறப்பு அலங்காரத்தில் தனித்தனியே வெள்ளி குதிரை வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.
நான்கு ராஜ வீதிகளை வலம் வந்த சுவாமியை ஏராளனமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
