இந்தோனேசியாவின் மொலுக்கா கடல் பகுதியில் இன்று காலை (ஏப்ரல் 2) உள்ளூர் நேரப்படி 6:48 மணிக்கு பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.
ரிக்டர் அளவுகோலில் 7.4 ஆகப் பதிவான இந்த நிலநடுக்கம், டெர்னேட் தீவுக்கு அருகே 35 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நிலநடுக்கத்தின் தாக்கம் மிக வலுவாக இருந்ததால், கட்டிடங்கள் குலுங்கியதைக் கண்டு பொதுமக்கள் அதிர்ச்சியில் வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சம் புகுந்தனர்.
இந்தோனேசியாவில் 7.4 ரிக்டர் நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை விடுப்பு! மலேசியா, பிலிப்பைன்ஸூக்கும் ஆபத்தா?
