அசாம், கேரளா மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் இன்று சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) மற்றும் ‘இந்தியா’ (INDIA) கூட்டணி ஆகிய இரு தரப்பிற்கும் இடையே கடும் போட்டி நிலவும் இந்தத் தேர்தல், தேசிய அரசியலில் முக்கியத் திருப்பமாகப் பார்க்கப்படுகிறது.
2021-ஆம் ஆண்டு நடைபெற்ற புதுச்சேரி தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் 10 இடங்களையும், பாஜக 6 இடங்களையும் வென்று ஆட்சியைப் பிடித்தன.
இம்முறை மும்முனைப் போட்டி நிலவுவதால், தேர்தல் முடிவுகள் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.
இன்று பதிவாகும் வாக்குகள் அனைத்தும் வரும் மே 4-ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
புதுச்சேரி, கேரளா, அசாமில் இன்று தேர்தல்! மே 4-ல் தீர்ப்பு!
