மத்திய அரசு ஊழியர்களுக்கான 8வது ஊதியக் குழுவின் பரிந்துரைகள் குறித்த விவாதங்கள் தற்போது சூடுபிடித்துள்ளன.
குறிப்பாக, தேசிய கவுன்சில் – ஜே.சி.எம் (National Council-JCM) சார்பில் சமர்ப்பிக்கப்பட்ட முன்மொழிவில், குறைந்தபட்ச அடிப்படை ஊதியத்தை தற்போதுள்ள ₹18,000லிருந்து ₹69,000 ஆக உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது கிட்டத்தட்ட நான்கு மடங்கு உயர்வாகும். ஆனால், இது வெறும் கோரிக்கை மட்டுமே தவிர, அரசின் இறுதி முடிவு அல்ல என்பதைப் புரிந்து கொள்வது அவசியம்.
ஊதியக் குழுவின் பரிந்துரைகள் இன்னும் இறுதி செய்யப்படாத நிலையில், அரசாங்கம் இந்தக் புள்ளிவிவரங்கள் குறித்து இதுவரை எந்தவொரு பச்சைக்கொடியும் காட்டவில்லை.
8வது ஊதியக் குழுவில் ரூ.69,000 அடிப்படை ஊதியமாக நிர்ணயிக்க கோரிக்கை
