சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் அரசியல் குழுவின் உருப்பினரும், சீன பரப்புரைத் துறை அமைச்சருமான லி ஷுலெய், 20ஆம் நாள் ஜியாங்சி மாகாணத்தின் நான்ச்சாங் நகரில் 5வது தேசிய வாசிப்பு மாநாட்டில் கலந்துகொண்டு, 2026ஆம் ஆண்டிற்கான தேசிய வாசிப்பு வாரம் தொடங்கியது என அறிவித்தார்.
சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் பொதுசெயலாளர் ஷி ச்சின்பிங் எப்போதும் வாசிப்பை ஊக்குவித்து, நாடளவில் வாசிப்பை உத்திநோக்கு மற்றும் தேசிய மன உறுதி என்ற நிலைக்கு உயர்த்த வழிகாட்டி வருகிறார். கலாச்சாரத்தின் மூலம் வல்லரசை கட்டுமானத்தில் வாசிப்பின் முக்கிய பங்கை நன்றாக பயன்படுத்தவும், எல்லா தேசிய இனங்களின் கலாச்சார புத்தாக்கத்தின் உயிராற்றலை தூண்டவும் வேண்டும் என்று இம்மாநாட்டில் பங்கேற்றவர்கள் தெரிவித்துள்ளனர்.
