சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங்கும் ரஷிய அரசுத் தலைவர் விளாடிமிர் புத்தினும் மே 17ஆம் நாள் 10ஆவது சீன-ரஷிய பொருட்காட்சிக்கு வாழ்த்து செய்தி அனுப்பினர்.
ஷி ச்சின்பிங் செய்தியில் குறிப்பிடுகையில்,
சீன-ரஷிய நெடுநோக்கு ஒத்துழைப்பு கூட்டாளியுறவு நிறுவப்பட்ட 30ஆவது ஆண்டு நிறைவாகவும், சீன-ரஷிய அண்டை நாட்டு நட்புறவு உடன்படிக்கை கையொப்பமிடப்பட்ட 25ஆவது ஆண்டு நிறைவாகவும் இவ்வாண்டு திகழ்கின்றது. இரு நாடுகளின் பல்வேறு துறைகள், இந்த பொருட்காட்சியை வாய்ப்பாக கொண்டு, சீன-ரஷிய அண்டை நாடுகளான மேம்பாடுகளைப் பயன்படுத்தி, பன்முக நடைமுறை ஒத்துழைப்புகளை ஆழமாக்கி, இரு நாட்டு பொருளாதார சமூக வளர்ச்சியை முன்னேற்றி, இரு நாட்டு மக்களுக்கு நன்மை அளித்து, புதிய யுகத்தில் சீன-ரஷிய பன்முக நெடுநோக்கு ஒத்துழைப்பு கூட்டாளியுறவின் வளர்ச்சிக்கு பங்காற்ற வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
இந்த பொருட்காட்சி இருதரப்புகளின் முக்கிய ஒத்துழைப்புத் துறைகளுக்குக் கவனம் செலுத்தியது. இரு நாட்டு ஒத்துழைப்புக்காக திட்டமிட்டு, இரு நாட்டு மக்களுக்கு நலன் தரும் என்று புத்தின் தெரிவித்தார்.
