நீட் தேர்வுகளின் வினாத்தாள்கள் தொடர்ந்து கசிவது ஏன்? ராகுல் காந்தி கேள்வி!

Estimated read time 1 min read

டெல்லி: நீட் உள்ளிட்ட முக்கியத் தேர்வுகளின் வினாத்தாள்கள் தொடர்ந்து கசிவது ஏன் என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மத்திய அரசுக்கு கடும் கேள்வி எழுப்பியுள்ளார்.

மத்திய கல்வித்துறை அமைச்சரை பதவி நீக்கம் செய்யாமல் இருப்பதும் ஏன் என வினவிய அவர், கல்வித்துறை முழுமையாகதோல்வியடைந்துவிட்டதாகக் குற்றம் சாட்டினார்.எக்ஸ் (ட்விட்டர்) தளத்தில் பதிவிட்ட ராகுல் காந்தி, “மூன்று தேர்வுகள். மூன்று வயதினர். ஒரே அமைச்சர். கல்வித்துறை இப்போது பேரழிவுகளின் துறையாக மாறிவிட்டது” என்று தெரிவித்தார்.ராகுலின் மூன்று குற்றச்சாட்டுகள்:

நீட் யுஜி 2026 — வினாத்தாள் கசிவு காரணமாக 22 லட்சத்திற்கும் மேற்பட்ட மருத்துவ ஆசைக்காரர்கள் பாதிக்கப்பட்டனர்.சிபிஎஸ்இ கிளாஸ் 12 — மதிப்பீட்டு முறையில் பெரும் குளறுபடி, பல மாணவர்கள் கல்லூரி சேர்க்கைக்கான தகுதியை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. கிளாஸ் 9 — ஜூலை 1 முதல் புதிய மொழித் தேவை அமல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பள்ளிகளில் ஆசிரியர்கள் மற்றும் பாடப்புத்தகங்கள் இல்லாத சூழல் உருவாகியுள்ளது.

இந்த மூன்று விவகாரங்களையும் சுட்டிக்காட்டிய ராகுல் காந்தி, “இந்த முறைகேடுகள் குறித்து பேசாமலும், கல்வி அமைச்சரை பதவி நீக்கம் செய்யாமலும் இருப்பது ஏன்?” என பிரதமர் மோடியை நோக்கி கேள்வி எழுப்பினார். மாணவர்களுக்கு பிரதமர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

நீட் முறைகேடுகடந்த மே 3ஆம் தேதி நடைபெற்ற நீட் யுஜி 2026 தேர்வில் வினாத்தாள் கசிவு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து தேர்வு முழுவதும் ரத்து செய்யப்பட்டு, மறுதேர்வு ஜூன் 21ஆம் தேதி நடைபெறும் என தேசிய தேர்வு முகமை (NTA) அறிவித்துள்ளது.

சிபிஐ விசாரணை தீவிரமடைந்துள்ள நிலையில், பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.அடுத்த ஆண்டு முதல் நீட் தேர்வு கணினி முறையில் (Computer Based Test) நடத்தப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.ராகுல் காந்தியின் இந்தக் கடும் தாக்குதல், மத்திய கல்வித்துறை மீதான எதிர்க்கட்சிகளின் விமர்சனத்தை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author