இந்தியப் பங்குச் சந்தை வாரத்தின் நான்காவது வர்த்தக தினமான வியாழக்கிழமை (மே 21) அன்று முதலீட்டாளர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியளிக்கும் விதமாகப் பலத்த லாபத்துடன் தங்களின் வர்த்தகத்தைத் தொடங்கியுள்ளது.
வர்த்தகத் தொடக்கத்திலேயே மும்பை பங்குச் சந்தை குறியீடான சென்செக்ஸ் 500 புள்ளிகளுக்கு மேல் அதிரடியாக எகிறியது.
அதேபோல் தேசிய பங்குச் சந்தை குறியீடான நிஃப்டியும் 23,700 என்ற முக்கிய எல்லையைக் கடந்து சீறிப்பாய்ந்தது.
சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெயின் விலை தற்காலிகமாகக் குறைந்தது மற்றும் உலகளாவிய ஆசிய, ஐரோப்பிய சந்தைகளில் ஏற்பட்ட பலத்த ஏற்றமே இந்தியச் சந்தையின் இந்தத் திடீர் எழுச்சிக்கு முதன்மைக் காரணமாகும்.
தடாலடியாக உயர்ந்த இந்திய ரூபாய்: பங்குச்சந்தை மீட்சிக்கு பின்னணியில் உள்ள முக்கிய காரணங்கள்
