பின்லாந்து நாட்டு அதிபர் அலெக்சாண்டர் ஸ்டப் அவர்களுடன் நடைபெற்ற கூட்டு செய்தியாளர் சந்திப்பில் பேசிய இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, தற்போதைய உலகளாவிய மோதல்கள் குறித்துத் தனது கவலையை வெளிப்படுத்தினார்.
“இந்தியா எப்போதும் சட்டத்தின் ஆட்சி, பேச்சுவார்த்தை மற்றும் இராஜதந்திர உறவுகளையே நம்புகிறது.
உக்ரைன் அல்லது மேற்கு ஆசியா என எந்தப் பகுதியாக இருந்தாலும், ராணுவ மோதல்களால் மட்டும் எந்தப் பிரச்சினைக்கும் தீர்வுகாண முடியாது.” என்று அவர் திட்டவட்டமாகக் கூறினார்.
ராணுவ மோதல்களால் எதற்கும் தீர்வுகாண முடியாது: பிரதமர் மோடி அதிரடி பேச்சு
