சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் பொதுச் செயலாளரும் அரசுத் தலைவருமான ஷிச்சின்பிங் ஜூன் 9ஆம் நாள் பிற்பகல் வட கொரியாவில் அரசுமுறை பயணத்தை முடித்துக் கொண்டார். வட கொரிய தொழிலாளர் கட்சியின் பொதுச் செயலாளரும் தேசிய விவகாரத் தலைவருமான கிம் ஜுன் உன் மற்றும் அவரது மனைவி ரி சொல் ஜு விமான நிலையத்தில் பியொங்யாங்கை விட்டுப் புறப்படும் ஷிச்சின்பிங் மற்றும் அவரது மனைவி பேங் லியுவானுக்கு விமரிசையான வழி அனுப்பு விழாவை நடத்தினர்.
விமான நிலையத்துக்குச் செல்லும் வழியில் பியொங்யாங்கின் பல்வேறு துறைகளைச் சேர்ந்த மக்கள் சாலை பக்கங்களில் ஒன்றுகூடி, சீன-வட கொரிய நட்புறவு தொடர்பான முழக்கமிட்டு, ஷிச்சின்பிங்கை வழியனுப்பி வைத்தனர்.
