4வது சீனா சர்வதேச விநியோகச் சங்கிலி பொருட்காட்சி அண்மையில் பெய்ஜிங்கில் நடைபெற்றது. 600க்கும் மேலான தொழில் நிறுவனங்களும், பல்வேறு நாடுகளின் பிரதிநிதிக் குழுக்களும் நடப்புப் பொருட்காட்சியில் கலந்து கொண்டன. சீனாவில் நடைபெற்ற இப்பொருட்காட்சி, பல்வேறு நாட்டுச் சந்தைகளை ஒருங்கிணைப்பது மட்டுமல்லாமல், இரு தரப்பு மற்றும் பலதரப்புகளின் பொருளாதாரம் மற்றும் வர்த்தக கூட்டு வளர்ச்சிக்கும் விரிவான வாய்ப்புகளை வழங்கியுள்ளது என்று பல நாடுகளின் அதிகாரிகள் தெரிவித்தனர்.
நிகராகுவா அரசுத் தலைவரின் ஆலோசகர் ஓர்டேகா கூறுகையில், சீனாவுக்கும் நிகராகுவாவுக்கும் இடையில் அதிகமான ஒத்துழைப்புத் திட்டப்பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இத்திட்டப்பணிகளின் விநியோக சங்கிலியின் நிலைத்தன்மையை உத்தரவாதம் செய்ய வேண்டும். இந்நிலையில், இப்பொருட்காட்சியில் பங்கெடுத்தோம் என்றார்.
