செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தின் வருகையால் இந்தியாவில் வேலைவாய்ப்புகள் பறிபோகும் என்ற பரவலான அச்சத்திற்கு மத்தியில், ஒரு புதிய நம்பிக்கை அளிக்கும் ஆய்வு வெளிவந்துள்ளது.
சர்வதேச நிதி நிறுவனமான நோமுரா வெளியிட்ட புதிய ஆய்வறிக்கையின்படி, இந்தியாவில் செயற்கை நுண்ணறிவு காரணமாக இழக்கப்பட்ட வேலைகளை விட உருவாக்கப்பட்டுள்ள புதிய வேலைவாய்ப்புகளின் எண்ணிக்கை பல மடங்கு அதிகமாக உள்ளது.
கடந்த 2022 முதல் 2026 ஆகஸ்ட் வரையிலான காலத்தில் இந்தியாவில் 31,921 வேலைகள் பாதிக்கப்பட்ட நிலையில், 83,100 புதிய ஏஐ சார்ந்த வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டு நிறுவனங்களால் பணி நியமனங்கள் செய்யப்பட்டுள்ளன.
வேலை இழப்பை விட 2.6 மடங்கு புதிய வேலைகள்! இந்தியாவில் AI உருவாக்கிய அதிசயம்; நோமுரா ஆய்வின் பின்னணி
