ரொமேனிய அரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட தாயனுக்கு ஷி ச்சின்பிங் வாழ்த்து

சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் மே 22ஆம் நாள் ரொமேனிய அரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட குஷோல் தாயனுக்கு வாழ்த்து செய்தி அனுப்பினார்.

அவர் கூறுகையில்,

உலகில் சீனாவுடன் தூதாண்மையுறவு நிறுவிய மூன்றாவது நாடு ரொமேனியாவாகும். நீண்டகாலத்தில் இரு நாடுகள், ஒன்றுக்கு ஒன்று மதிப்பு அளித்து, ஒன்றுக்கு ஒன்று நலன் தரும் ஒத்துழைப்பை முன்னேற்றி வருகின்றன.

இரு நாட்டுறவின் வளர்ச்சியில் நான் உயர்வாக கவனம் செலுத்தி வருகிறேன். தாயனுடன் இணைந்து, இரு நாட்டு நட்புறவை தொடர்ந்து விரிவாக்கி, இரு நாட்டு மக்களுக்கு நன்மை புரிய விரும்புகிறேன் என்றார்.

You May Also Like

More From Author