மாடர்னா மற்றும் மெர்க் ஆகிய முன்னணி மருந்து நிறுவனங்கள் இணைந்து உருவாக்கியுள்ள தனிநபர் எம்ஆர்என்ஏ புற்றுநோய் தடுப்பூசி, அதன் இறுதி கட்ட மருத்துவ பரிசோதனையில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது.
மெலனோமா என்ற கடுமையான தோல் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு அறுவை சிகிச்சைக்குப் பிறகு மீண்டும் புற்றுநோய் வராமல் தடுப்பதில் இத்தடுப்பூசி சிறப்பாகச் செயல்பட்டுள்ளது.
புற்றுநோய் மருத்துவத் துறையில் எம்ஆர்என்ஏ தொழில்நுட்பம் அடைந்துள்ள இந்த வெற்றி, மருத்துவ உலகில் ஒரு புதிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.
புற்றுநோய் சிகிச்சையில் மிகப்பெரிய மைல்கல்! மாடர்னா நிறுவனத்தின் எம்ஆர்என்ஏ தடுப்பூசி சோதனையில் வெற்றி
