இந்தியக் கடற்படையின் நீருக்கடியிலான கண்காணிப்பு மற்றும் நீர்மூழ்கி எதிர்ப்புத் திறன்களை கணிசமாக அதிகரிக்கும் நோக்கில், ஐஎன்எஸ் மாங்க்ரோல் எனும் அதிநவீனப் போர்க்கப்பல் கடற்படையில் அதிகாரப்பூர்வமாகப் சேர்க்கப்பட்டுள்ளது.
கொச்சின் ஷிப்யார்ட் லிமிடெட் நிறுவனம் இந்திய கடற்படைக்காக கட்டி வரும் எட்டு நீர்மூழ்கி எதிர்ப்பு போர்க்கப்பல்களில் இது மூன்றாவது கப்பலாகும்.
வெற்றிகரமாக கட்டப்பட்டு முடிந்துள்ள இக்கப்பல் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 21) அன்று கடற்படையிடம் முறைப்படி ஒப்படைக்கப்பட்டது.
உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஐஎன்எஸ் மாங்க்ரோல் போர்க்கப்பல் இந்திய கடற்படையில் இணைப்பு
