தமிழகத்தின் வடவெல்லையில் இந்திய விடுதலைக்குப் பிறகு தமிழர்கள் தெலுங்கு பயிலவேண்டிய சூழ்நிலை இருந்ததை மாற்றிய பெருமகான் வடவெல்லை மீட்புத் தந்தை மங்கலங்கிழார்.
தமிழர்களின் உரிமையை தமிழர்களுக்கு மீட்டுத் தந்தவர்.
தமிழக வடவெல்லையில் தமிழர் தமிழ்ப் படிக்க இயலாத சூழ்நிலையில் தானே அறநெறித் தமிழ்க் கழகம் உருவாக்கி, ஊர் தோறும் சென்று மாணவர்களுக்குத் தமிழ்ப் பாடம் நடத்தி பல ஆசிரியர்களை உருவாக்கிய பெருமானார் மங்கலங்கிழார்.
அவருடைய வாழ்க்கையைப் பற்றியும் வாக்குகள் பற்றியும் எடுத்தியம்புவதாக ஆசிரியர் மங்கலங்கிழார் வாழ்வும் வாக்கும் என்னும் இந்நூல் அமைந்துள்ளது.
************
நூல்: ‘ஆசிரியர் மங்கலங்கிழார் வாழ்வும் வாக்கும்’
ஆசிரியர்: முனைவர் மோ.கோ. கோவைமணி
கிண்டில் பதிப்பகம்
பக்கங்கள்: 209
