இந்தியாவில் வாழும் இலங்கைத் தமிழர்கள் சொந்த நாடு திரும்ப புதிய வழிவகை: இலங்கை அரசு ஒப்புதல்  

Estimated read time 0 min read

இந்தியாவில் தங்கியுள்ள பல்லாயிரக்கணக்கான இலங்கை தமிழ் அகதிகள் எவ்வித சட்டப் பிரச்சனைகளுமின்றி தாயகம் திரும்புவதற்கு புதிய, எளிமையாக்கப்பட்ட வழிமுறையை இலங்கை அரசு முறைப்படி அறிவித்துள்ளது.
முறையான பயண ஆவணங்கள் இன்றி இந்தியாவில் தஞ்சம் புகுந்த அகதிகள் மீது குடிவரவு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட மாட்டாது என இலங்கை அமைச்சரவை உறுதியளித்துள்ளது.
இலங்கை அரசாங்கத்தின் பொதுப் பாதுகாப்புத் துறை அமைச்சர் ஆனந்த விஜேபால சமர்ப்பித்த இந்தச் சிறப்புத் திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

You May Also Like

More From Author