இனிய தீப ஒளி திருநாள் வாழ்த்துக்கள்: தலைவர்கள் வாழ்த்து  

மத்தாப்புக்களின் வெளிச்சம் போல் அனைவரது வாழ்விலும் ஒளியேற்றும் தீபாவளியாக அமைய தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து அவர்கள் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்:
ஆளுநர் ஆர்.என்.ரவி,”அன்னை லட்சுமி நம் இதயங்களை அளவற்ற அன்பு மற்றும் ஆழ்ந்த இரக்கத்தால் ஒளிரச் செய்து, அனைவருக்கும் மிகுந்த மகிழ்ச்சி, நல்ல ஆரோக்கியம், செழிப்பு, சமுதாயத்தில் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டை வளர்த்து அருள் புரிவாராக” என தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
தவெக தலைவர் விஜய்: அன்பு, அமைதி செல்வம் நிலைத்து நீடித்து இருக்கட்டும் என தீபாவளி நல்வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

You May Also Like

More From Author