“எப்போது வேண்டுமானாலும் நடக்கலாம்….!” ஆபரேஷன் சிந்தூர் இன்னும் முடியலை…. ஓய்வு பெற்ற பிறகும் தளபதி அனில் சவுகான் உடைத்த அந்த ஒரு ரகசியம்….!! 

Estimated read time 0 min read

எதிர்காலத்திலும் பாகிஸ்தான் நாட்டினால் இந்தியாவிற்குப் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் தொடரும் என்று முன்னாள் முப்படைத் தலைமைத் தளபதி அனில் சவுகான் எச்சரித்துள்ளார். புதுடெல்லியில் நடைபெற்ற ‘இந்தியாவின் பாதுகாப்புக்கான அச்சுறுத்தல்களும் சவால்களும்’ என்ற தலைப்பிலான சொற்பொழிவில் பேசிய அவர், எல்லையில் இந்திய ராணுவம் எப்போதும் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

பாகிஸ்தான், சவூதி அரேபியா மற்றும் துருக்கி ஆகிய நாடுகள் சமீபத்தில் கையெழுத்திட்டுள்ள மெக்கா கூட்டுப் பாதுகாப்பு ஒப்பந்தம் குறித்து அவர் கவலை தெரிவித்தார். இதுபோன்ற சர்வதேச ஒப்பந்தங்கள் பாகிஸ்தானுக்கு அதீத தன்னம்பிக்கையைக் கொடுத்து, தவறான கணிப்புகள் மற்றும் முடிவுகளை எடுக்க வழிவகுக்கும் என்பதால் இந்தியா மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவால் தொடங்கப்பட்ட ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கை இன்னும் முழுமையாக முடிவடையவில்லை, மாறாகத் தற்காலிகமாக மட்டுமே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்றும் ஜெனரல் அனில் சவுகான் கூறியுள்ளார். சிந்து நதி நீர் ஒப்பந்த இடைநிறுத்தம் போன்ற இந்தியாவின் நடவடிக்கைகள், அண்டை நாட்டின் தவறான நடத்தையில் மாற்றத்தை ஏற்படுத்தும் என்று தான் நம்புவதாக அவர் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானிடம் உள்ள அணு ஆயுதங்கள் காரணமாக, நேரடியாக ராணுவ மோதலில் ஈடுபடுவதைத் தவிர்த்து, பயங்கரவாதம் மற்றும் மறைமுகப் போரை நடத்துவதையே அவர்கள் முதன்மை உத்தியாகக் கொண்டுள்ளனர். அணு ஆயுதப் பாதுகாப்பை ஒரு கேடயமாகப் பயன்படுத்தி, எல்லையோர பயங்கரவாதத்தை அவர்கள் ஊக்குவித்து வருகின்றனர் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

தீர்க்கப்படாத எல்லைப் பிரச்சினைகள் மற்றும் எல்லை தாண்டிய பயங்கரவாதம் ஆகியவை இந்தியாவின் வெளியுறவுப் பாதுகாப்பிற்குத் தொடர்ந்து பெரும் சவாலாகவே இருக்கும் என்று அவர் எச்சரித்தார். எனவே, பயங்கரவாதம் மற்றும் மறைமுகப் போர்களைத் எதிர்கொள்ள இந்தியா ஒருங்கிணைந்த பாதுகாப்பு அமைப்போடு எப்போதும் தயாராக இருக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

You May Also Like

More From Author