சீன-நேபாள எல்லையில் அமைந்துள்ள கியிரோங்ங்-ரசூவா நுழைவாயில் பகுதியில் கடும் மண்சரிவு ஏற்பட்ட பிறகு, சீனத் தேசிய வானிலை மையம் அவசர நடவடிக்கையை மேற்கொண்டு, நேபாளத்துக்குப் பொருந்திய மாசூ என்ற நுண்ணறிவார்ந்த வானிலை கண்காணிப்பு மற்றும் முன்னெச்சரிக்கை சேவையை அந்நாட்டுக்கு வழங்கியுள்ளது. அதே வேளையில், பேரழிவுக்கான மீட்பு பணிகளுக்கு ஆலோசனைகளை அளிக்கும் விதம், மண்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதி மற்றும் அதன் அருகிலுள்ள பகுதிகளின் காலநிலை சிறப்புக்கான ஆய்வு மற்றும் வானிலை முன்னறிவிப்பு தகவல்களை, சீனத் தேசிய காலநிலை மையம் வழங்கி வருகிறது என்று சீன வானிலைப் பணியகம் 9ம் நாள் தெரிவித்தது.
