சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங், சீனாவில் அரசு முறை பயணம் மேற்கொண்ட வெனிசுலா அரசுத் தலைவர் நிக்கோலஸ் மதுரோ மோரோஸுடன் செப்டம்பர் 13ஆம் நாள் பிற்பகல் மக்கள் மாமண்டபத்தில் பேச்சுவார்த்தை நடத்தினார்.
ஷி ச்சின்பிங் கூறுகையில், சீனாவும் வெனிசுலாவும் ஒன்றுக்கொன்று நம்பிக்கை கொண்ட நண்பர்களாகவும், கூட்டாக வளர்ந்து வரும் கூட்டாளிகளாகவும் திகழ்கின்றன. சீனா நெடுநோக்கு பார்வையுடன் வெனிசுலாவுடனான உறவைக் கையாண்டு வருகின்றது.
நாட்டு இறையாண்மை, தேசிய இன கௌரவம், சமூக நிலைத் தன்மை ஆகியவற்றைப் பேணிக்காப்பதற்கு வெனிசுலா மேற்கொண்டு வருகின்ற முயற்சிகளுக்கு சீனா உறுதியுடன் ஆதரவளிக்கும் என்றார். மேலும், உங்களுடன் இணைந்து, இரு நாடுகளின் பல்வேறு துறைகளில் ஒத்துழைப்புகளை வலுப்படுத்தி, இரு நாட்டு மக்களுக்கு மேலதிக நலன்களை வழங்கி, உலக அமைதி மற்றும் வளர்ச்சிக்கு மேலதிக நேர்மறை ஆற்றலை ஊட்ட விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார்.
சீன-வெனிசுலா உறவை, அனைத்து சூழ்நிலையிலுமான நெடுநோக்கு கூட்டாளி உறவாக உயர்த்துவதாக இரு நாட்டு அரசுத் தலைவர்கள் அறிவித்தனர்.