வட இந்தியாவில் வெப்ப அலை எச்சரிக்கை, தென்னிந்தியாவில் கனமழை எச்சரிக்கை

டெல்லி, ராஜஸ்தான், பஞ்சாப் மற்றும் ஹரியானா ஆகிய மாநிலங்கள் குறிப்பாக வட இந்தியாவிற்கு வெப்ப அலை எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) வியாழக்கிழமை வெளியிட்டுள்ளது.

அதேநேரத்தில் தென்னிந்தியாவில் மே 22 வரை கனமழை பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால், கேரளா, லட்சத்தீவு மற்றும் தெற்கு கர்நாடகாவில் அடுத்த வாரத்தில் இடியுடன் கூடிய கனமழை மற்றும் பலத்த காற்றுடன் மழை பெய்யும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

வார இறுதியில் மழையின் அளவு அதிகரிக்ககூடும். கடலோர ஆந்திரா, ஏனாம், தெலுங்கானா மற்றும் ராயலசீமா ஆகிய பகுதிகளிலும் இந்த காலகட்டத்தில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author