புதிய ராணுவ தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் உபேந்திர திவேதி நியமனம்

உலகின் மிகப்பெரிய ராணுவப் படைகளில் ஒன்றான இந்திய ராணுவத்தின் அடுத்த தலைவராக லெப்டினன்ட் ஜெனரல் உபேந்திர திவேதி நியமிக்கப்பட்டுள்ளார்.

தற்போது ராணுவத்தின் துணைத் தலைவராக இருக்கும் லெப்டினன்ட் ஜெனரல் திவேதி, ஜெனரல் மனோஜ் சி பாண்டேவிக்கு பதிலாக ஜூன் 30ஆம் தேதி முதல் இந்திய ராணுவத்தின் அடுத்த தலைவராக பணியாற்றுவார்.

லெப்டினன்ட் ஜெனரல் திவேதி ஜூலை 1, 1964 இல் பிறந்தார்.
அவர் சைனிக் பள்ளி ரேவா, தேசிய பாதுகாப்பு கல்லூரி மற்றும் அமெரிக்க இராணுவ போர் கல்லூரியின் முன்னாள் மாணவர் ஆவார்.

அவர் பாதுகாப்பு மற்றும் மேலாண்மை ஆய்வுகளில் எம் ஃபில், வியூக ஆய்வுகள் மற்றும் இராணுவ அறிவியலில் இரண்டு முதுகலைப் பட்டங்களைப் பெற்றுள்ளார்.

You May Also Like

More From Author