சென்னை,ஜூலை 6- தமிழ்நாடு யூனியன் ஆப் ஜெர்னலிஸ்ட்ஸ் (டியூஜே) சங்கத்தின் மாநில தலைவராகச் செயல்பட்டு வந்த தோழர் பி.எஸ்.டி. புருஷோத்தமன் கடந்த 27.06.2026 அன்று காலமானார். அதைத் தொடர்ந்து, அவரது குடும்பத்தினரின் சார்பில் முகலிவாக்கத்தில் உள்ள தோழரின் இல்லத்தில் ஞாயிறன்று (ஜூலை5) அவரது உருவப் படம் திறப்பு மற்றும் நினைவஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்விற்குச் சென்னை மாவட்ட டி.யூ.ஜே. கௌரவ தலைவரும், சன் டி.வி.யின் முன்னாள் செய்தி ஆசிரியருமான உ. மைக்கேல் ஜார்ஜ் தலைமை தாங்கினார். தோழர் புருஷோத்தமனின் மைத்துனரான வி.மோதிலால் முன்னிலை வகித்தார். இதில் தமிழ்நாடு எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, தோழர் பி.எஸ்.டி. புருஸோத்தமனின் உருவபடத்தை திறந்து வைத்து மலரஞ்சலி செலுத்தினார். அப்போது அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் பேசுகையில், சமுதாயத்தில் நடுநிலையாக செயல்படக்கூடிய பத்திரிகையாளர்களின் எண்ணிக்கை விரல்விட்டு எண்ணக்கூடிய அளவில் தான் உள்ளது என்றும், அத்தகைய நடுநிலையானவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருவதை தான் எப்போதும் சுட்டிக்காட்டி வருவதாகவும் குறிப்பிட்டார். குறிப்பாக இருபது வருடங்களுக்கு முன்பு இருந்த எண்ணிக்கையோடு ஒப்பிடும்போது தற்போது அது குறைந்துள்ள சூழலில், தோழர் புருஷோத்தமன் போன்ற சிறந்த பத்திரிகையாளரின் இழப்பு உண்மையிலேயே பத்திரிகை உலகிற்கு மிகப்பெரிய இழப்பு என்று அவர் வருத்தம் தெரிவித்தார். மேலும், வெவ்வேறு கருத்துகள் கொண்ட பத்திரிகையாளர்களை ஒருங்கிணைப்பது என்பது சாதாரண விஷயமல்ல, அது ஒரு சிலரால் மட்டுமே சாத்தியப்படக்கூடிய ஒன்று என்று பாராட்டிய அமைச்சர், தோழர் புருஷோத்தமன் பத்திரிகை உலகில் பலருக்கு அடையாளம் கொடுத்து, ஒரு நல்ல நிலையை உருவாக்கிக் காட்டி சமுதாயத்தின் முன்னேற்றத்திற்கு உதவியுள்ளார் என்பதற்கு இங்குள்ளவர்களின் பேச்சே சாட்சி என்றார். நல்ல பத்திரிகையாளர்கள் 10 பேர் இருந்தால் போதும், ஒரு ஆட்சியையே மாற்றலாம் என்பதே இதுவரை வரலாறாக இருந்து வருகிறது என்று சுட்டிக்காட்டிய அவர், பத்திரிகையாளர் சங்கங்கள் பல பிரிவுகளாகப் பிரிந்து கிடக்கின்ற இக்கட்டான சூழலில், அனைவரையும் ஒன்றிணைக்கும் முயற்சிகளை மேற்கொண்டு வந்த புருஷோத்தமனின் மறைவு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு என்று புகழாரம் சூட்டினார். இவ்விழாவில் ஆலந்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஆர்.எம்.ஹரிஷ், இந்திய கம்யூனிஸ்டு கட்சி தேசிய குழு உறுப்பினர் டாக்டர். ரவீந்திரநாத், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தென்சென்னை மாவட்ட குழு உறுப்பினர் எஸ்.ஹரி, சென்னை யூனியன் ஆப் ஜெர்னலிஸ்ட்ஸ் செயலாளர் ஷபீர் அகமது, மூத்த பத்திரிகையாளர்கள் அ.குமரேசன் மற்றும் டி.எஸ்.எஸ்.மணி ஆகியோர் கலந்துகொண்டு நெகிழ்ச்சியுடன் நினைவஞ்சலி உரை ஆற்றினர். மறைந்த தோழர் பி.எஸ்.டி. புருஷோத்தமனின் மனைவி வி.கிருஷ்ணவேணி, மகன்கள் பி.ஜவஹர், பி.சுதிந்தர், மகள் பி.பாரதி மற்றும் குடும்பத்தினர், உறவினர்கள் இந்த நிகழ்வை ஒருங்கிணைத்தனர். இவர்களுடன் முகலிவாக்கம் த.வெ.க. வட்ட செயலாளர் விஜயகுமார், பத்திரிகையாளர் ரஜினிகாந்த், டியூஜே மாநில பொதுச்செயலாளர் கே.முத்து , அமைப்பு செயலாளர் பி.ஆர்.வேலங்கன், இணை செயலாளர் ஆர்.முருககனி, சென்னை மாவட்ட தலைவர் ம.மீ.ஜாபர், செயலாளர் எஸ்.பி.தேவேந்திரன் உள்ளிட்ட பல பத்திரிகையாளர்கள் சிபிஎம், தவெக மற்றும் குடும்ப உறுப்பினர்கள் பெருமளவில் பங்கேற்று பி.எஸ்.டி. புருஷோத்தமனுக்குத் தங்களது வீரவணக்கத்தையும் நினைவஞ்சலியையும் செலுத்தினர். படம் பிஎஸ்டி அஞ்சலி
Category: சீனா
CMG News
தணிக்கை பற்றிய ஷி ச்சின்பிங்கின் கட்டளை
சீன கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் பொது செயலாளரும் அரசுத் தலைவரும், மத்திய ராணுவ ஆணையத்தின் தலைவருமான ஷி ச்சின்பிங், அண்மையில், சீனாவின் தணிக்கைப் [மேலும்…]
வசந்த விழா கொண்டாட்ட நிகழ்ச்சியின் ஆயத்தப் பணி
சீன ஊடகக் குழுமம் ஏற்பாடு செய்கின்ற, 2025ஆம் ஆண்டு வசந்த விழா கொண்டாட்ட கலை நிகழ்ச்சியின் 2ஆவது ஒத்திகை 10ஆம் நாள் வெற்றிகரமாக நடைபெற்றது. [மேலும்…]
எகிப்து முன்னாள் தலைமையமைச்சர் சிஎம்ஜிக்குப் பேட்டி
எகிப்து முன்னாள் தலைமை அமைச்சர் எசாம் ஷராஃப் அண்மையில் சீன ஊடகக் குழுமத்துக்குச் சிறப்பு பேட்டியளித்தார். சீனாவில் முதன்முறையாக தான் 2005ம் ஆண்டில் [மேலும்…]
சீனத் தேசிய பீக்கிங் இசை நாடக நிறுவனத்தைச் சேர்ந்த இளம் கலைஞர்களுக்கு ஷிச்சின்பிங் பதில் கடிதம்
சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் அண்மையில் சீனத் தேசிய பீக்கிங் இசை நாடக நிறுவனத்தைச் சேர்ந்த இளம் கலைஞர்களுக்குப் பதில் கடிதம் அனுப்பினார். தன்னுடைய [மேலும்…]
சீனச் சட்டக் கழகத்தின் 9ஆவது தேசிய உறுப்பினர் மற்றும் பிரதிநிதிகளின் மாநாட்டுக்கு ஷிச்சின்பிங் கடிதம்
சீனச் சட்டக் கழகத்தின் 9ஆவது தேசிய உறுப்பினர் மற்றும் பிரதிநிதிகளின் மாநாடு நடைபெறுவதை முன்னிட்டு, சீன அரசு தலைவர் ஷிச்சின்பிங் கடிதம் அனுப்பினார். இக்கடிதத்தில் [மேலும்…]
தென் கொரிய அரசுத் தலைவரின் பாதுகாப்புத் துறைத் தலைவரின் மீதான விசாரணை
தென் கொரிய அரசுத் தலைவரின் பாதுகாப்புத் துறைத் தலைவர் பார்க் ஜாங் ஜுன் 10ஆம்நாள் தென் கொரிய காவற்துறையின் தேசிய விசாரணை தலைமையகத்திற்கு வந்து [மேலும்…]
செவ்வியல் மேற்கோள்களில் புதிய சிந்தனைகள்’ என்ற சிறப்பு நிகழ்ச்சி ஒளிபரப்பு
“செவ்வியல் மேற்கோள்களில் புதிய சிந்தனைகள்” என்ற சிறப்பு நிகழ்ச்சியின் மூன்றாம் தொடர் ஜனவரி 3ஆம் தேதி முதல் சிஜிடிஎன் ஊடகத்தின் பன்மொழி மேடையில் வழங்கப்படுவதுடன் [மேலும்…]
நவீன தொழில்முறை கல்வி அமைப்பை நிறுவும் சீனா
அறிவியல் தொழில்நுட்பம், தேசிய நெடுநோக்கு தேவை ஆகியவற்றுக்கு ஏற்றப்படி பாடத்துறைகளின் உருவாக்கம் மற்றும் மாற்றம் என அமைப்புமுறையை விரைவுபடுத்தி, அறிவியல் தொழில்நுட்பங்களின் புதிய கண்டுபிடிப்புகளையும் [மேலும்…]
சீனத் திரைப்பட நாள் நிகழ்வு
சீனத் திரைப்பட நாள் நிகழ்வு நேபாளத்தின் தலைநகர் காத்மாண்டுவில் 9 ஆம் நாள் நடைபெற்றது. இது பற்றி, நேபாளத்துக்கான சீன தூதரகத்தின் அலுவலர் வாங் சின் கூறுகையில் [மேலும்…]
சிட்சாங்கின் டிங்ரி பகுதியில் நிலநடுக்கப் பேரிடர் மீட்புதவி மற்றும் நிவாரணப் பணிகளை சீனா வலியுறுத்தல்
சிட்சாங் தன்னாட்சிப் பிரதேசத்தின் டிங்ரி பகுதியில் நிலநடுக்கப் பேரிடர் மீட்புதவி மற்றும் நிவாரணப் பணிகளை ஏற்பாடு செய்வது குறித்து சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய [மேலும்…]
