முன்பை விட மேலதிக விருந்தினர்களை வரவேற்கும் சீனாவின் இறக்குமதிப் பொருட்காட்சி

6ஆவது சீனச் சர்வதேச இறக்குமதிப் பொருட்காட்சிக்கான ஆயுத்தம் குறித்து சீன அரசவையின் தகவல் தொடர்பு பணியகம் அக்டோபர் 23ஆம் நாள் பிற்பகல் நடத்திய செய்தியாளர் கூட்டத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.


கணிப்பின்படி, நடப்புப் பொருட்காட்சி 154 நாடுகள், பிரதேசங்கள் மற்றும் சர்வதேச அமைப்புகளின் விருந்தினர்களை வரவேற்க உள்ளது. இதில் கலந்து கொள்ள, 3400க்கும் மேற்பட்ட கண்காட்சியாளர்களும், 3.94 லட்சம் தொழில்முறை பார்வையாளர்களும் பதிவு செய்துள்ளனர்.

கோவிட்-19 நோய் தொற்றுக்கு முந்தைய நிலைக்கு இது முற்றிலும் மீண்டுள்ளது. உலகின் 500 முன்னணி நிறுவனங்கள் மற்றும் தொழில்களின் முன்னிலையிலுள்ள தொழில் நிறுவனங்களின் 100க்கும் மேற்பட்ட உயர் அதிகாரிகள் இப்பொருட்காட்சியில் கலந்து கொள்வதை உறுதி செய்துள்ளனர். இந்த அளவு புதிய உச்சத்தை எட்டியுள்ளது.

மேலும், 69 நாடுகள் மற்றும் 3 சர்வதேச அமைப்புகள் தேசிய கண்காட்சியில் கலந்து கொள்ள உள்ளன. இவற்றில் 11 நாடுகள் இப்பொருட்காட்சியில் முதன்முறையாக கலந்து கொள்வதோடு, 34 நாடுகள் முதன்முறை நேரடியாகக் கலந்து கொள்ள உள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author