TNPSC குரூப் 2 , 2ஏ தேர்வர்களுக்கு மகிழ்ச்சி; விண்ணப்பிக்க காலஅவகாசம் நீட்டிப்பு..!! 

Estimated read time 1 min read

TNPSC குரூப் 2 மற்றும் 2ஏ தேர்விற்கு நாளை வரை விண்ணப்பிக்கலாம் என்று காலஅவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அரசு துறையில் காலியாக உள்ள பணியிடங்கள் போட்டி தேர்வுகள் மூலம் அரசு பணியாளர் தேர்வாணையம் நிரப்பி வருகிறது.

இதற்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி அவ்வப்போது வெளியிட்டு வருகிறது. அதன்படி சமீபத்தில் குரூப் 4 தேர்வு நடந்து முடிந்த நிலையில் இதனை தொடர்ந்து குரூப் 2 மற்றும் 2ஏ பிரிவில் பல்வேறு துறைகளில் 2327 காலி பணியிடங்களை நிரப்பும் அறிவிப்பை கடந்த ஜூன் 20ம் தேதி டி என் பி எஸ் சி வெளியிட்டது.

இதற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன.

இதற்கு விண்ணப்பிக்க ஜூலை 19 இன்று கடைசி நாள் என தெரிவிக்கப்பட்டு இருந்த நிலையில் தேர்வர்களின் கோரிக்கையை ஏற்று குரூப் 2 மற்றும் 2ஏ தேர்விற்கு விண்ணப்பிக்க நாளை(20-07-24) வரை காலஅவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

விருப்பமுள்ளவர்கள் www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

Please follow and like us:

You May Also Like

More From Author