ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) புவி கண்காணிப்பு செயற்கைக்கோள்-8ஐ (EOS-08) வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது.
இந்த செயற்கைக்கோள் SSLV-D3 ராக்கெட் மூலம் செலுத்தப்பட்ட நிலையில், இந்த ராக்கெட் தனது அதன் மூன்றாவது மற்றும் இறுதி வளர்ச்சிப் பயணத்தை நிறைவுசெய்தது.
ஒரு வருட பணிக்காக வடிவமைக்கப்பட்ட EOS-08 செயற்கைக்கோள் மைக்ரோசாட்/ஐஎம்எஸ்-1 பஸ்ஸில் கட்டப்பட்டது மற்றும் மூன்று பேலோடுகளை சுமந்து செல்கிறது.
எலக்ட்ரோ-ஆப்டிகல் இன்ஃப்ராரெட் பேலோட் (EOIR), குளோபல் நேவிகேஷன் சாட்டிலைட் சிஸ்டம்-ரிஃப்ளெக்டோமெட்ரி பேலோட் (GNSS-R) மற்றும் SiC UV டோசிமீட்டர் ஆகிய இந்த பேலோடுகள் செயற்கைக்கோள் அடிப்படையிலான கண்காணிப்பு, சுற்றுச்சூழல் கண்காணிப்பு மற்றும் பேரிடர் மேலாண்மை உள்ளிட்ட பல்வேறு பயன்பாடுகளுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.
SSLV-D3 ராக்கெட்டின் இறுதிக்கட்ட சோதனையை வெற்றிகரமாக நிறைவு செய்தது இஸ்ரோ
