2025-க்குள் கடல் படுக்கையை ஆய்வு செய்ய களமிறங்கும் சமுத்ராயன்

இந்தியாவின் புவி அறிவியல் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, இந்தியாவின் ஆழ்கடல் ஆராய்ச்சி திட்டமான சமுத்திரயான் பற்றிய அற்புதமான செய்திகளைப் பகிர்ந்துள்ளார்.

அடுத்த ஆண்டு இறுதிக்குள் கடல் மேற்பரப்பில் இருந்து 6 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஆழ்கடலை ஆய்வு செய்ய, இந்தியா தனது விஞ்ஞானிகளை அனுப்பவுள்ளது.

பிடிஐக்கு அளித்த பேட்டியில், அமைச்சர் கிரண் ரிஜிஜு, 6,000 மீட்டர் ஆழத்திற்கு மனிதர்களை எடுத்துச் செல்ல வடிவமைக்கப்பட்ட ஆழ்கடல் நீரில் மூழ்கும் கருவியான ‘மத்ஸ்யா6000’, பெரும் முன்னேற்றம் அடைந்து வருவதாகவும், திட்டத்தை மதிப்பாய்வு செய்த பிறகு இந்த ஆண்டு தொடக்கத்தில் ஆழமற்ற நீர் சோதனைகள் நடக்கலாம் என்றும் விளக்கினார்.

Please follow and like us:

You May Also Like

More From Author