பிரதமர் மோடியை சந்தித்த மலேசிய பிரதமர் அன்வர் இப்ராகிம்!

Estimated read time 0 min read

3 நாள் அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ள மலேசிய பிரதமர் அன்வர் இப்ராகிம் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார்.

டெல்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் பிரதமர் மோடியும், மலேசியா பிரதமர் அன்வரும் இருதரப்பு உறவு குறித்து முக்கிய பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது இருநாட்டு பிரதமர்கள் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. பின்னர் இருநாட்டு தலைவர்களும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது பேசிய மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம், இருநாட்டு பரஸ்பர ஒத்துழைப்பு குறித்து விரிவான பேச்சுவார்த்தையை நடத்தியதாக தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, மலேசிய பல்கலைக்கழகத்தில் திருவள்ளுவர் சிலையை நிறுவ ஒத்துழைப்பு வழங்கிய அன்வர் இப்ராஹிமுக்கு நன்றி தெரிவித்து கொண்டார்.

Please follow and like us:

You May Also Like

More From Author